மிருகசிரீஷம் நட்சத்திரம்
நட்சத்திர வரிசையில் மிருகசிரீஷம் ஐந்தாவது ஆகும்.
இது 3 நட்சத்திரங்களைக் கொண்டது. இந்த நட்சத்திரத்தின் 2 பாதங்கள் ரிஷபம் ராசியிலும்,
மற்ற 2 பாதங்களும் மிதுனம் ராசியிலும் வருகிறது.
மிருகசிரீஷம் நட்சத்திரம் பெயர் காரணம்
மிருகசிரீஷம் நட்சத்திரம், உண்மையைத் தேடுதல்
என்ற செயலைக் குறிக்கிறது.
மிருகசிரீஷம் நட்சத்திரம் – சில குறிப்புக்கள்
மிருகசிரீஷம் நட்சத்திரத்தின் அதிபதி செவ்வாய்
ஆவார். இது பொது நட்சத்திரம். இதன் வடிவம் மானின் தலை போன்று இருக்கும். இவர்கள் வணங்க
வேண்டிய தெய்வம் ஸ்ரீ சோமன் – சந்திரன்.
முழு மனநிறைவை கொடுப்பது இதன் சக்தியாகும்.
இவர்கள் தேவ கணத்தைச் சேர்ந்தவர்கள். பொதுவாக இவர்கள் தாமஸம் குணம்
கொண்டவர்கள், அதாவது சற்று மெதுவாகச் செயல்படக்கூடியவர்கள்.
இந்த நட்சத்திரம் நமது உடலில், புருவங்களை ஆட்சி செய்கிறது. இதில் பிறந்தவர்கள்
பித்த உடம்பு கொண்டவர்கள்.
மிருகசிரீஷத்தில் பிறந்தவர்களின் அதிர்ஷ்ட
எழுத்து
வ மற்றும் க
எண்
9
கல்
பவளம்
நிறம்
வெள்ளி மற்றும் சாம்பல்
திசை
மேற்கு.
இதனுடைய
மிருகம்
பெண் பாம்பு
பட்சி
கோழி
பகை
நட்சத்திரம் சுவாதி.
வேதை
நட்சத்திரம் சித்திரை மற்றும்
அவிட்டம்
பஞ்ச
பூதம் பூமி
மிருகசிரீஷம்
நட்சத்திரம், செவ்வாய் கிரகத்தை அதிபதியாகக் கொண்டு ரிஷபம் ராசியில் இரண்டு
பாதங்களும், மிதுனம் ராசியில் மீதி இரண்டும் வருகிறது.
ஓவ்வொரு
நட்சத்திரத்திற்கும் ஓரு மரம் குறிப்பிடப்பட்டுள்ளது. அவ்வகையில் இதற்கான மரம் கருங்காலி மரம்
ஆகும். இந்த மரத்தை, இந்த நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் வளர்ப்பதால் ஏற்படும்
நன்மைகள் பல உண்டு. அந்த மரம் எவ்வாறு வளர்கிறதோ அவ்வாறே இவர்களுடைய வளர்ச்சியும்
பல மடங்கு பெருகும்.
பொதுவான குணங்கள்
மிருகசிரீஷம்
நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் உண்மையான அன்பு கொண்ட ஆத்மாக்கள். நல்ல உள்ளம்
கொண்டவர்கள். இந்த மனிதர்கள் மிகவும் உணர்ச்சி வசப்படக்கூடியவர்கள். மனத்திடம்
மிகவும் குறைவானவர்கள், வெகுளி எனவும் கூறலாம்.
மிருகசிரீஷம்
நட்சத்திரத்தில் பிறந்தவர்கள், மிகவும் திறமைசாலிகள் மற்றும் புத்திசாலிகளாக இருப்பார்கள்.
ஆனால் நிலையான எண்ணங்கள் இருக்காது, எண்ணங்கள் அலை பாய்ந்துக் கொண்டே இருக்கும்.
இவர்கள்
ஓழுக்கச்சீலர்கள் மற்றும் நேர்மையானவர்கள். இந்த குணங்களை மற்றவரிடமும்
எதிர்பார்ப்பார்கள். இவர்கள் ஆராய்ச்சியாளர்கள் எப்பொழுதும் எதையாவது ஆராய்ந்து
கொண்டே இருப்பார்கள். நட்புடன் பழகுவார்கள். உற்சாகமானவர்களும் கூட.
மாநிறமும்,
உறுதியான உடலையும் கொண்டவர்கள். ஈர்க்கும் வண்ணம் அகன்ற கண்களை உடையவர்கள். அழகான
கேசம் இருக்கும். நல்ல கிரகிக்கும் தன்மை மற்றும்அறிவாற்றல் இருக்கும். எதையும்
விரைவில் கற்றுக்கொள்வார்கள். படைப்பாற்றல் மிகுந்து காணப்படும். எதையும் தனது
திறமையால் அழகாகச் செய்வார்கள்.
இவர்களுக்கும்
பயணம் மேற்கொள்வது மிகும் பிடித்தமான ஓன்று. உலகை சுற்றி பார்க்க விருப்பம்
கொண்டவர்கள். லட்சியத்தை தனது அயறாத உழைப்பால் அடைவார்கள். ஓவியம், பாட்டு, நடனம்
போன்றவற்றில் அதிக திறமையுள்ளவர்கள். உதவி செய்யும் குணம் உண்டு. ஆடம்பரத்தை
விரும்புவார்கள். ஆடம்பரமான பொருட்களைப் பயன்படுத்த விரும்புவார்கள்.
சில
நேரங்களில் பயந்த சுபாவமும் எட்டிப் பார்க்கும். தன்னைக் குறைத்து மதிப்பிடும்
குணமும் இருக்கும். வாழ்க்கையை எளிதாக எடுத்துக் கொண்டு வாழ்வார்கள். தன் மன
எண்ணங்களை வெளியில் கூறமாட்டார்கள், ரகசியமானவர்கள். விடியற்காலையில் எழுபவர்கள்.
பெரிய அளவில் நோய்கள் இவர்களைத் தாக்காது. .
மிக
முக்கியமான பண்புகள்
அழகானவர்கள்
எதையும்
விரைவாகக் கற்பவர்கள்
எந்த
வேலையையும் திறம்பட செய்வபர்கள்
எதையும்
கிரகிக்கும் தன்மை உண்டு
தூய்மையான
உள்ளம் கொண்டவர்கள்
கடின
உழைப்பாளிகள்
தொழில்
சிறந்த
ஆராய்ச்சியாளர்கள்
இயற்பியல்
துறை
வானவியில்
துறை
ஜோதிடம்
ஓவியர்கள்
நடன
கலைஞர்கள்
பாடகர்கள்
ஆசிரியர்கள்
ஓவியர்கள்
கட்டுமானத்
துறை
எழுத்தாளர்கள்
ஆடை
வியாபாரிகள்
மிருகசிரீஷம்
நட்சத்திர கோயில்
அருள்மிகு
ஸ்ரீ ஆதி நாராயணப் பெருமாள் கோயில்
மூலவர்
ஸ்ரீ
ஆதி நாராயணப் பெருமாள்
அம்மன்
ஸ்ரீ
ஸ்ரீதேவி தாயார்
ஸ்ரீ
பூதேவி தாயார்
இடம்
எண்க்கண்,
திருவாரூர் அருகில், திருவாரூர் மாவட்டம், தமிழ்நாடு, இந்தியா.
மிருகசிரீஷம் பெண்களின் பொதுவான குணங்கள்
மிருகசிரீஷம்
நட்சத்திரத்தில் பிறந்த பெண்கள், புத்திசாலிகள் மற்றும் கூர்மையான அறிவு
கொண்டவர்கள். இசையில் அதிக ஆர்வம் கொண்டவர்கள். ஓவியக் கலையில் நல்ல தேர்ச்சி
இருக்கும். நடனம் இவர்களுக்கு அழகாக வரும்.
அழகான
கண்களைப் பெற்றவர்கள். நல்ல வளவளப்பான பட்டுப் போன்ற கூந்தல் இவர்களுக்கு உண்டு.
நல்ல தைரியசாலிகளாக இருப்பார்கள். மிருது வசனம் பேசக்கூடியவர்கள்.
சுறுசுறுப்பானவர்கள்.
பெரும்பாலும்
இவர்கள், நல்ல பணக்கார குடும்பத்தில் பிறந்தவர்களாக இருப்பார்கள். ஆடம்பரமான
வாழ்க்கையில் விருப்பம் மிகவும் அதிகம். ஆடம்பரமான பொருட்களை இவர்கள் விரும்புவார்கள்,
பயன்படுத்துவார்கள்.
நிலையான
எண்ணம் கொண்டவர்கள். தங்களது குறிக்கோளை அடைந்து வெற்றி பெறுவார்கள். படிப்பில்
ஆர்வம் அவ்வளவாக இருக்காது. நண்பர்களைத் தேர்ந்தெடுப்பதில் அதிக கவனம் செலுத்துவது
முக்கியம். எளிதில் ஏமாற்றப்படுவார்கள்.
எப்பொழும்
எச்சரிக்கை உணர்வுடனே காணப்படுவார்கள். சற்று சுயநலமும் இருக்கும். தனது சொற்களால்
பிறரை எளிதில் காயப்படுத்திவிடுவார்கள். இந்தக் குணத்தை மாற்றினால் வாழ்க்கை
நன்றாக இருக்கும். அதிக உணர்ச்சி வசப்படுபர்கள். இதைக் கட்டுப்படுத்துவது மிகவும்
தேவையான ஓன்று. இல்லையென்றால் இவர்கள் தனக்குத்தானே தண்டனைக் கொடுப்பது
போன்றதாகும்.
பெற்றோர்கள்
மற்றும் உடன்பிறந்தவர்கள் மீது மிகவும் அன்பாக இருப்பார்கள். அன்பான தாயாகவும்,
பாசமான சகோதரியாகவும் இருப்பார்கள். தன் குடும்பத்தை மிகவும் நேசிப்பார்கள். காதல்
ஓன்று வாழ்வில் ஏற்படும். தன் கணவன் மீது அன்பு கொண்டவர்கள்.
மாதவிடாய்
பிரச்சனைகள் வரலாம். உடலில் வலிகள் ஏற்படலாம். மற்றப்படி பெரிய உடல் நோய்கள்
வராது.
வேலை
மற்றும் தொழில்
ஆராய்ச்சியாளர்கள்
ஆடை
வடிவமைப்பாளர்கள்
எழுத்தாளர்கள்
ஜோதிடர்கள்
ஆசிரியர்கள்
பொறியாளர்கள்
இசைக்
கலைஞர்கள்
ஓவியர்கள்
பொருத்தம்
தனது
கணவன் மீது அதிக அன்பு இருக்கும்.
நல்ல
குழந்தைகளைப் பெற்றவர்கள்.
மிருகசிரீஷம்
ஆண்களின் பொதுவான குணங்கள்
மிருகசிரீஷம்
நட்சத்திரத்தில் பிறந்த ஆண்கள் நல்ல உள்ளம் கொண்டவர்கள். இவர்கள் நேர்மையானவர்கள்
மற்றும் மற்றவர்கள் மீது மிகுந்த அக்கறை கொண்டவர்கள். சொந்தம் மற்றும் நட்பு
இவற்றில் மிகுந்த எச்சரிக்கை தேவை. ஏனென்றால் இவர்கள் நண்பர்கள் மற்றும்
உறவினர்களை மிகவும் நம்புவார்கள் ஆனால் மோசமாக ஏமாற்றப்படுவர்கள். இது இவர்களை
மிகவும் பாதிக்கும்.
ஆடம்பரப்
பிரியர், வாழ்க்கையும், தான் உபயோகிக்கும் பொருட்களும் ஆடம்பரமாகவே இருக்கும்.
நல்ல தொழில் செய்யவராக இருப்பார் அதனால், தொழிலில் லாபமும், வெற்றியும்
கிடைக்கும். திறமையான பாடகராகவும், இசை வல்லுனர்களாகவும் திகழ்வார்கள். இவர்கள் நல்ல
ஆராய்ச்சியாளர்களாகவும், ஆசிரியர்களாகவும் இருப்பார்கள்.
இவர்களில்
சிலருக்கு வயிறு சம்மந்தப்பட்ட சிறு உபாதைகள் வரலாம். காயங்கள் மற்றும் தோள்
வலியும் ஏற்ப்பட வாய்ப்பு உண்டு. கவனம் தேவை. மருத்துவரின் ஆலோசனை பெற்றால்
குணமாகும்.
தொழில்
தொழிலதிபர்
ஆடை
விற்பனையாளர்
அதிகாரிகள்
வனத்துறை
அதிகாரிகள்
விலை
உயர்ந்த ஆபரணக் கற்கள் விற்பனை
எழுத்தாளர்கள்
நிர்வாகிகள்
பொருத்தம்
மனைவி,
குழந்தைகள் மீது அன்பு கொண்டவர்கள்
முதல் பாதம் – சூரியன் – ரிஷபம்
நன்றாகக் கற்றவர்கள்.
அழகான தோற்றம் கொண்டவர்கள்
தன் அழகைப் பேணுவதில் அக்கறைக் கொண்டவர்கள்
எதிரியை எளிதில் வெல்பவர்கள்
உண்மையானவர்கள்
கலையார்வம் கொண்டவர்கள்
வலிமையற்ற உடலைப் பெற்றவர்கள்
தூய்மை குறைந்த பழக்கங்கள் சற்று உண்டு
முன்கோபம் உண்டு
இரண்டாம் பாதம் – புதன் – ரிஷபம்
மகிழ்ச்சியானவர்கள்
பேச்சாற்றல் கொண்டவர்கள்
தனது லட்சியத்தை அடைவார்கள்
நகைச்சுவை உணர்வுக் கொண்டவர்கள்
மிருதுவானவர்கள்
தன்னம்பிக்கை அதிகம் இருக்கும்
நல்ல அறிவுரை வழங்குவார்கள்
நம்பிக்கைக்குப் பாத்திரமானவர்கள்
அறிவானவர்கள்
சிறிது கோபம் வரும்
மாற்று பாலித்திடம் ஈர்ப்பு இருக்கும்
மூன்றாம் பாதம் – சுக்கிரன் – மிதுனம்
கடவுளிடம் பக்தி உண்டு
எளிதாகப் பழகக்கூடியவர்கள்
புத்திசாலிகள்
உதவி செய்யும் குணம் அதிகம் இருக்கும்
சந்தோஷமானவர்கள்
நல்ல உள்ளம் கொண்டவர்கள்
பெரியவர்களிடம் மரியாதையாக நடந்து கொள்வார்கள்
அடக்கமானவர்கள்
நான்காம் பாதம் – செவ்வாய் - மிதுனம்
புத்திசாலியானவர்கள்
திடமான உடல் கொண்டவர்கள்
உதவும் குணம் உண்டு
ஆர்வம் கொண்டவர்கள்
சற்று கோபம் வரும்
பிறரால் தூண்டப்பட்டால் உணர்ச்சி வசப்பட்டுக் கோபம் கொள்வார்கள்.
விவாதத்தில் ஆர்வம் உண்டு
முந்தைய நட்சத்திரம் >> ரோகிணிநட்சத்திரம்
அடுத்த நட்சத்திரம் >> திருவாதிரை
நட்சத்திரம்
உங்கள் பிறந்த நட்சத்திரம் பற்றி அறிய, உங்களது பிறந்த தேதி, மாதம்,
வருடம் ஆகியவற்றை எங்களுக்கு அனுப்புங்கள்.
இணைப்பு - Contact
us
No comments:
Post a Comment